Sunday, July 19, 2009

எது வரை இந்த வாழ்க்கை??

கடலின் எல்லை
அலைகள் கரை சேரும் வரை!!!
பறவையின் எல்லை
சிறகுகள் சக்தி இழக்கும் வரை!!!
காற்றின் எல்லை
வெற்றிடம் இருக்கும் வரை!!!
மனிதனின் எல்லை
அறியாமல் இருப்பதுதான் மிகப்பெருந் தொல்லை!!!

குழந்தையாய் நீ அழுதாய்
தாலாட்டு பாட தாய் இருந்தாள்!!
பிரேதமாய் நீ கிடந்தாய்
அழுது புலம்ப ஊர் திரண்டது!!
வாழ்க்கையின் தொடக்கம் உணர்வதற்குள்
முடிவினை அடையும் மனிதா!!!
தொலைந்ததை தேடி செல்வதுயில்லை வாழ்க்கை
நிலைத்ததை நிறைவுடன் ஏற்பதே வாழ்க்கை!!!

விழி திறந்தாய்
புவி தெரிந்தது!!!
செவி திறந்தாய்
கல்வி பிறந்தது!!!
இதழ் திறந்தாய்
மௌனம் பறந்தது!!!
மனம் திறப்பாய்
ஞானம் பிறக்கும் வாழ்க்கை விளங்கும்!!!

2 Comments:

Anonymous Anonymous said...

Hey, romba nanna iruku :)

8:01 AM  
Anonymous Anonymous said...

Hi everyone


Free advance eBay Service to Seller your used and new products at http://www.BuySellDirect.net


http://www.BuySellDirect.net is what people will use in the future to sell their new and used products FREE.

12:08 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home