Tuesday, April 29, 2008

மௌனம்

இது உச்சரிப்பதற்கு சொல்லப்பட்ட வார்த்தை இல்லை
பல நச்சரிப்பை தவிர்ப்பதற்கு சொல்லப்படாத வார்த்தை!!

இது நாவிற்கு பொருந்தாத வார்த்தை
மனத்திற்கு பொறுமை தரும் வார்த்தை!!

இது சண்டைகளை கலைக்கும் வார்த்தை
பல சமாதானங்களை விளைவிக்கும் வார்த்தை!!

இது சினத்தை சிதறடிக்கும் வார்த்தை
சந்தோஷத்தை சிறகடிக்க வைக்கும் வார்த்தை!!

விடை காண முடியா பல வினாக்களுக்கு
தீர்வாய் விளங்கும் இந்த வார்த்தையை
மௌனம் என்று வாயால் மட்டும் உச்சரிக்காமல்
மனத்தால் சித்தரித்து வாழ்வில் கடைப்பிடிப்போம்!!

1 Comments:

Blogger Unknown said...

Moumam Kavithai- Nalla oru kavithai. Edhugai-Monai is good. One small spelling mistake..
"samadhanangalai villaivikkum"... small 'la' illa... bilg 'la' varanum.

Govinda Kavithai- Looks like u r becoming a spiritual person.. Good work.. Continue..

9:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home